ஆப்நகரம்

ஹீரோவாக நடிப்பது குறித்து அனிருத் பதில்...

கோலிவுட் திரையுலகத்தில் ஜொலித்த இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவராக ஹீரோவாக களமிறங்கி வருகின்றனர்.

TNN 15 Oct 2016, 2:50 pm
கோலிவுட் திரையுலகத்தில் ஜொலித்த இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவராக ஹீரோவாக களமிறங்கி வருகின்றனர். முன்னனி இசையமைப்பாளர்களாக இருந்த விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும்நிலையில், தற்போது இளம் இசையமைப்பாளர் ஹிப் பாப் தமிழா ஆதியும் ‘மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிவிட்டார்.
Samayam Tamil anirudh ravichander speaks about acting as hero
ஹீரோவாக நடிப்பது குறித்து அனிருத் பதில்...


இந்நிலையில், முன்னனி தமிழ் ஹீரோக்களின் படத்திற்கு இசையமைக்கும் பிஸியில் உள்ள அனிருத் ரவிசந்திரன் ஹீரோ ஆவது எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அனிருத் கூறும்போது, “என்னுடைய வாழ்க்கையில் எனக்கு எல்லாமே மியூசிக் தான். மியூசிக் தான் என் ஹீரோ” என கூறியுள்ளார். இதிலிருந்து நான் இசையமைப்பாளராகவே இருக்க விரும்புகிறேன், அதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவேன் என மறைமுகமாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்