ஆப்நகரம்

கொரோனாவுக்கு நிதி திரட்ட நேரலையில் பாடும் அனிருத்

கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக அனிருத் யூடியூப் நிறுவனம் நடத்தும் ஒன் நேஷன் வீடியோவில் நேரலையில் பாடவுள்ளார்.

Samayam Tamil 30 Apr 2020, 7:38 pm
கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்து உள்ளது. எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
Samayam Tamil Anirudh sings for Corona Fund Raiser


தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்து ஊரடங்கு தொடருமா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு உதவும் விதமாக பல்வேறு பிரபலங்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் கொரோனா நிவாரணத்திற்கு நிதி திரட்டும் விதமாக லைவ்வில் பாடப்போகிறார்.

யூடியூப் நிறுவனம் நடத்தும் One Nation என்கிற நிகழ்ச்சியில் அனிருத் இன்று இரவு 8.52 முதல் பாடவுள்ளார் அனிருத்.


இந்த One Nation நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கலைஞர்கள் ஒரு நாள் முழுவதும் நேரலையில் பாடுகின்றனர்.

இதில் ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்