ஆப்நகரம்

நயன்தாராவுக்காக அனிருத் எழுதிய பாடல்?!

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை அனிருத் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 11 May 2018, 6:23 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை அனிருத் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil coco


நடிகை நயன்தாரா தற்போது ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகியான நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ‘எதுவரையோ...’ என்ற பாடல் வெளியானது. இந்நிலையில், வரும் 17ஆம் தேதி இரண்டாவது லிரிக்கல் வீடியோவை ரிலீஸ் செய்யப் போவதாக அனிருத் அறிவித்துள்ளார். ‘கல்யாண வயசு’ என்று தொடங்கும் இந்தப் பாடலை அனிருத்தான் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளராக இருந்த அனிருத் தற்போது பாடலாசிரியராகவும் மாறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்