ஆப்நகரம்

அனிதா தற்கொலை: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்திய சபாஷ் நாயுடு!

அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தில் கமல் சந்திக்கயிருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

TNN 2 Sep 2017, 1:30 pm
அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தில் கமல் சந்திக்கயிருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil anitha suicide kamalhaasan stop biggboss tamil shooting
அனிதா தற்கொலை: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்திய சபாஷ் நாயுடு!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தனியாக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தற்கொலை குறித்து அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் செய்தியோடு, கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.



இதில், கனவோடு வாழ்ந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர். கனவுடன் வாழ்ந்த மாணவியை கண்மூட வைத்து, நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். அனிதாவுக்காக கோபப்படுவதற்கு அக்ஷராவோ, ஸ்ருதியோ மட்டும் எனக்கு மகளாக இருக்க வேண்டியதில்லை. அனிதாவும் எனக்கு மகள்தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், அனிதாவின் மரணத்திற்காக வெகுண்டெழுந்து போராட வாருங்கள் என்று கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷைத் தொடர்ந்து கமல்ஹாசனும் அனிதா குடும்பத்தை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளதால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்