ஆப்நகரம்

கொன்றுவிடுவேன், ஆசிட் வீசுவேன்னு காதலர் மிரட்டுகிறார்: ஃபேஸ்புக் லைவில் நடிகை கதறல்

காதலர் தன்னை கொலை செய்வேன் என்றும், முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டியதாக நடிகை அஞ்சலி அமீர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Dec 2019, 11:56 am
காதலர் தன்னை கொலை செய்வேன் என்றும், முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டியதாக நடிகை அஞ்சலி அமீர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anjali ameer accuses live in partner of blackmail
கொன்றுவிடுவேன், ஆசிட் வீசுவேன்னு காதலர் மிரட்டுகிறார்: ஃபேஸ்புக் லைவில் நடிகை கதறல்


அஞ்சலி அமீர் அழுகை

பிக் பாஸ் மலையாளம் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திருநங்கையான அஞ்சலி அமீர். ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த பேரன்பு படத்தில் அருமையாக நடித்திருந்தார் அஞ்சலி. இந்நிலையில் அஞ்சலி அமீர் ஃபேஸ்புக் லைவில் வந்து அழுது கொண்டே தனது காதலர் மீது புகார் தெரிவித்துள்ளார். அஞ்சலி ஒருவருடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வரும் நிலையில் அவர் மீது பரபரப்பு புகார் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

லிவ் இன் பார்ட்னர்

ஃபேஸ்புக் லைவில் அஞ்சலி கூறியிருப்பதாவது, நான் கட்டாயத்தால் ஒரு ஆணுடன் லிவ் இன் முறையில் வாழ வேண்டியதாகிவிட்டது. அவர் எனக்கு துரோகம் செய்வதுடன், பல காலமாக என்னை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரின் கொடுமையை தாங்க முடியாமல் அவரை விட்டு விலகிவிடலாம் என்று முடிவு செய்தேன். இதையடுத்து அவர் பிரிந்து சென்றால் உன்னை கொலை செய்வேன், முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று கூறி மிரட்டுகிறார் என்று கூறி அஞ்சலி கண்ணீர்விட்டுள்ளார்.

கொடுமை கொடுமை

அந்த நபரின் கொடுமையை இனியும் தாங்க முடியாது. பேசாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றுகிறது. அந்த நபர் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர் எனக்கு சுமார் ரூ. 4 லட்சம் தர வேண்டியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் தன் செலவுக்கு என்னை நம்பித் தான் இருக்கிறார். எனக்கு பெற்றோர் இல்லை. அதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார். எனக்கு மற்றவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். வேறு வழியே இல்லாமல் தான் நான் ஃபேஸ்புக் லைவில் வந்து அழுகிறேன் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆறுதல்

அஞ்சலியின் ஃபேஸ்புக் லைவை பார்த்த ரசிகர்கள், அக்கா தயவு செய்து தற்கொலை எண்ணத்தை கைவிடவும். தற்கொலை செய்வதால் எந்த பிரச்சனையும் தீராது. அந்த நபருடன் பேசும்போது அதை பதிவு செய்து போலீசாரிடம் கொடுக்கவும். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இப்படி அழ வேண்டாம், தைரியமாக இருக்கவும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்