ஆப்நகரம்

வேணாம் தலைவா, சொன்னா கேளுங்க: ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை

ரஜினியின் நலனை மனதில் வைத்து ரசிகர்கள் அவரிடம் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 23 Nov 2020, 4:26 pm
கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பை அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தீராததால் தன்னால் தற்போதைக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று ரஜினி தெரிவித்தார்.
Samayam Tamil rajinikanth


இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பை துவங்கும் வேலையை கைவிட்டனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்திற்கு செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீதமுள்ள காட்சிகளை ஒரு மாதத்திற்குள் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் சிறுத்தை சிவா.

ரஜினி தொடர்பான காட்சிகள் நிறைய இருப்பதால் அவர் நிச்சயம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என்று ரஜினி கூறியிருக்கக்கூடும். அதனால் தான் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு காய்ச்சல் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி தீயாக பரவியது. அதை பார்த்தவர்கள் ரஜினிக்கு கொரோனாவாக இருக்குமோ என்று பேசத் துவங்கிவிட்டனர். ஆனால் ரஜினிக்கு காய்ச்சல் எல்லாம் இல்லை, அவர் நலமாக வீட்டில் இருக்கிறார் என்று அவரின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் தெரிவித்த பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

என்னாது, ரஜினிக்கு காய்ச்சலா?

காய்ச்சல் என்று கிளம்பிய வதந்தியையே தாங்க முடியவில்லை, அதனால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் தலைவா என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் வயதை கருத்தில் கொண்டு தற்போதைக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக ரஜினியின் நண்பர்களும் அதை தான் சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அண்ணாத்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்