ஆப்நகரம்

ரஜினி இல்லாமல் துவங்கும் அண்ணாத்த ஷூட்டிங்?

ரஜினி இல்லாமலேயே அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 7:02 pm
ரஜினிகாந்த் அடுத்து நடித்து வரும் அண்ணாத்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விஸ்வாசம் படத்திற்கு பிறகு சிவா இயக்கும் படம் இது என்பதும் எதிர்பார்ப்பு எழுவதற்கு முக்கிய காரணம்.
Samayam Tamil annaatthe shooting to commence without rajinikanth
ரஜினி இல்லாமல் துவங்கும் அண்ணாத்த ஷூட்டிங்?


அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பிரச்சனை முழுமையாக முடிந்த பிறகு தான் ரஜினி இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. அதனால் ஷூட்டிங் துவங்குவது தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினி தன் உடல்நிலையை கருத்தில் கொண்டே இவ்வாறு கூறியிருக்கிறார் என்றும் தகவல் பரவியது.

ரஜினி இல்லாமல் துவங்கும் ஷூட்டிங்

தற்போது அக்டோபர் 2ம் வாரத்தில் இருந்து படப்பிடிப்பை தொடர இயக்குனர் சிவா முடிவெடுத்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது வந்திருக்கும் அப்டேட் என்னவென்றால் அடுத்த மாதம் துவங்க உள்ள ஷூட்டிங்கில் ரஜினி பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ரஜினி தவிர மற்ற நடிகர்களின் பகுதிகளை படமாக்க தான் சிவா முடிவெடுத்து இருக்கிறாராம்.

மேலும் நடிகர்கள் அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்திகொண்டு இருக்குமாறும் கேட்டிருக்கிறார்களாம். அதனால் அடுத்த மாதத் துவக்கத்தில் பாதுகாப்பாக ஷூட்டிங்கை துவங்க முடியும்.

அண்ணாத்த கதை?

அண்ணாத்த படத்தின் கதை பற்றி சில மாதங்களுக்கு முன்பு செய்தி ஒன்று பரவியது. இதில் ரஜினிக்கு மகளாக தான் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார் என தெரிகிறது. ரஜினியின் முறை பெண்களான மீனா, குஷ்பு ஆகியோர் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்றும் ஆனால் அது நடக்காததால், அதற்கு பிறகு அவரது மகளையாவது மருமகளாக்கி கொள்ளலாம் என பின்னர் திட்டம் போடுவார்கள். அதனால் வரும் பிரச்சனைகள் பற்றி தான் இந்த படத்தின் கதை இருக்கும் என கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் கதை இது தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வில்லன் யார்?

விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்து இருந்த ஜாக்கி ஷ்ராஃப் தான் அண்ணாத்த படத்தின் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளது என தகவல் சமீபத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று பின்னர் விளக்கம் வந்தது. கொரோனா லாக் டவுன் துவங்கப்படும் முன்பே அவரை படக்குழு அணுகி இருக்கிறது. ஆனால் அதற்கு பிறகு அவரை யாரும் தொடர்பு கொள்ளவே இல்லையாம். அதனால் அவர் வில்லனாக நடிப்பது கேள்விக்குறி தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்