ஆப்நகரம்

சினிமா ஆசை காட்டி, இரவில் தன்னுடன் இருக்குமாறு மிரட்டிய பாலிவுட் இயக்குனர்! மாடல் அழகி புகார்!

இயக்குனர் சுபாஷ் கை, இரவு என்னுடன் தங்காவிட்டால், படத்தில் உன்னை அறிமுகம் செய்யமாட்டேன் என்று என்னை மிரட்டியதாக பிரபல நடிகை கேட் சர்மா புகார் கூறியுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 4:52 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் சுபாஷ் கை. இவரை, ஒரு பெண் தனக்கு போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நடிகையும், மாடல் அழகியுமான கேட் சர்மாவும் இயக்குனர் சுபாஷ் கை தன்னையும் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Samayam Tamil subash-ghai


நடிகை கேட் சர்மா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “இயக்குனர் சுபாஷ் கை, என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். நானும் சென்றேன். வீட்டில் 6 பேர் இருந்தனர். அவர்களுக்கு முன்னால் தனக்கு பாடி மசாஜ் செய்துவிடும்படி கூறினார். நானும் பெரிய டைரக்டர் என்பதால் செய்துவிட்டேன். சில நிமிடங்கள் அவருக்கு மசாஜ் செய்துவிட்டு கை கழுவுவதற்காக பாத்ரூம் சென்றேன்.

என் பின்னாலேயே சுபாஷ் கையும் வந்துவிட்டார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி எனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது பெட்ரூமுக்கு சென்றார். அங்கு என்னை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க முயன்றார். நான் அவர் பிடியில் இருந்து விடுபட்டு கிளம்ப தயாரானேன். உடனே இரவு என்னுடன் தங்காவிட்டால் படத்தில் அறிமுகம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினார்’’ என நடிகை கேட் சர்மா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்