ஆப்நகரம்

எனக்கே இப்படின்னா, மத்தவங்களுக்கு சொல்லவா வேணும்?: மீரா மிதுன் வேதனை

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மீரா மிதுன் தெளிவான திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Nov 2019, 12:00 pm
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மீரா மிதுன் தெளிவான திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anti corruption meera mithun has a plan
எனக்கே இப்படின்னா, மத்தவங்களுக்கு சொல்லவா வேணும்?: மீரா மிதுன் வேதனை


ஊழலை ஒழிப்பேன்

தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை, தனக்கு எதிராக பெரிய கும்பலே உள்ளது என்று கூறி பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த கையோடு மீரா மிதுன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தமிழகத்தின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் பதவி தனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மீரா மிதுன் ட்விட்டரில் அறிவித்தார். ஆனால் அவர் வெளியிட்ட ஐடி மற்றும் ஆணை போலி என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்து சில ஆதாரங்களை வெளியிட்டனர். அதை எல்லாம் மீரா கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் ஊழலை ஒழிக்காமல் விட மாட்டேன் என்ற முடிவோடு உள்ளார்.

எனக்கே இப்படி என்றால்?

மீரா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எப்பொழுதுமே நினைப்பவள். அதன் ஒரு பகுதியாகத் தான் ஊழல் தடுப்பு பிரிவில் சேர்ந்துள்ளேன். நான் மக்களை தொடர்பு கொண்டு தமிழகத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருக்கும் ஊழலை சரி செய்வேன். நான் ஒரு நடிகை, மாடலாக இருந்தும் கூட எனக்கே அநீதி இழைக்கப்படுகிறது என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள் என்றார்.

போலீஸ் அதிகாரிகள்

ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைத்து போலீஸ் அதிகாரிகளும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக வேண்டி இருக்கும். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கும் இளைஞர்களை நியமிப்பேன். நான் எவ்வளவு தீவிரமாக கண்காணிக்கிறேன் என்பதை மக்களுக்கு புரிய வைப்பேன். இந்த முயற்சியில் நான் 30 முதல் 40 சதவீதம் வெற்றி பெற்றால் கூட அது எனக்கு ஒரு சாதனை தான் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

பாலிவுட்டில் வாய்ப்பு

மாநிலம் விட்டு மாநிலம் சென்றுள்ளபோதிலும் தமிழகத்தின் மீது அக்கறை உள்ளதாக கூறுகிறார் மீரா மிதுன். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஐடியாவில் இருக்கும் மீரா முதலில் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். மீரா மும்பையில் செட்டில் ஆன நேரம் அவருக்கு 2 பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே அவர் ஆசை. அதுவும் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறார் அவர். மீராவின் அரசியல் ஆசை பற்றி அறிந்த அவரின் ரசிகர்கள் அவரை தினமும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்