புது திரைப்படங்களை திருட்டுத்தனமாக ஒளிபரப்புபவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், திருட்டி டிவிடி, ஆன்லைனில் திரைப்படங்களை ஒளிபரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சட்டவிரோத செயல்களை தடுக்க இயக்குநர் மிஸ்கின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படுவதாக விஷால் தற்போது அறிவித்துள்ளார்.
இந்த குழு திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைனில் புது திரைப்படங்களை ஒளிபரப்புபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். மேலும் புதுப்படங்களை செல்போன் மற்றும் கேமிரா மூலம் தியேட்டர்களில் படம்பிடிப்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Anti-Piracy cell created by Tamilnadu producers council
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், திருட்டி டிவிடி, ஆன்லைனில் திரைப்படங்களை ஒளிபரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சட்டவிரோத செயல்களை தடுக்க இயக்குநர் மிஸ்கின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படுவதாக விஷால் தற்போது அறிவித்துள்ளார்.
இந்த குழு திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைனில் புது திரைப்படங்களை ஒளிபரப்புபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். மேலும் புதுப்படங்களை செல்போன் மற்றும் கேமிரா மூலம் தியேட்டர்களில் படம்பிடிப்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Anti-Piracy cell created by Tamilnadu producers council