ஆப்நகரம்

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த அனுபமா பரமேஸ்வரன்: அதிர்ச்சியில் படக்குழு!

படப்பிடிப்பு தளத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் மயங்கி விழுந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 16 Jul 2018, 1:47 pm
படப்பிடிப்பு தளத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் மயங்கி விழுந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil anupa


மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வந்த பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் மூலம் மியா ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தில், அனைவரது ஆதரவையும் பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தனுஷூடன் இணைந்து கொடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், தற்பொழுது தெலுங்கில் ஹலோ, குரு பிரெமகோஷம் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடித்துக்கொண்டிருந்த போது, அனுபமா திடீரென்று மயங்கு விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்த அழுத்தம் அதிகமானதால், மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு வார காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்