அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் படத்தில் மேரி என்ற ரோலில் நடித்ததன் மூலமாக மிகவும் பாப்புலர் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த அந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேமம் படம் வெளியான பிறகு அதில் நடித்த மூன்று நடிகைகளும் மிகப் பெரிய அளவில் பாப்புலர் ஆனார்கள். மற்ற மொழிகளில் இருந்தும் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு வந்து குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேமம் படம் வந்து 5 வருடங்கள் ஆகும் நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு பிரேமம் என்று தான் பெயர் வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கையையே மாற்றிய படம் அது தான், இது பற்றி பேசியிருந்த அவர், "பிரேமம் படத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. கொரோனா பிரச்சனையைத் தாண்டி இதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் காரணமாகத் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். யாருக்காவது அனுபவமாவை தெரியும் என்றால் அதற்கு காரணம் மேரி ஆகத் தான் இருக்கும். அந்த கதாப்பாத்திரம் போல வேறு எந்த கதாபாத்திரமும் இவ்வளவு அழுத்தமாக இருக்கவில்லை. ஐந்து வருடம் ஆகிவிட்டது என்பதை கூட என்னால் நம்ப முடியவில்லை. பாடல் வெளியானது, படம் வெளியானது, அதன் பிறகு வந்த ட்ரோல்கள், தெலுங்கில் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்தது, தற்போது மொத்தம் 13 படங்கள் நடித்திருப்பது என அனைத்தும் நடந்திருக்கிறது.
நான் நடிக்க விரும்பியது உண்மை தான், நான் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது வாழ்க்கை இது. அல்போன்ஸ் புத்ரன் என் வாழ்க்கையில் ஒரு தேவதையாக வந்து, எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றி விட்டார், அதனால் தான் எங்களுடைய வீட்டுக்கு பிரேமம் என பெயர் வைத்திருக்கிறோம்.
மேலும் கடந்த 5 வருடங்களில் குறைந்த அளவிலான மலையாள படங்களில் மட்டுமே நடித்து இருப்பதற்கான காரணத்தை கேட்டதற்கு, "பிரேமம் படம் வெளியான பிறகு என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சித்தார்கள். என்னை திமிர் பிடித்தவள் என்றும் அகங்காரி என்றும் விமர்சித்தார்கள். நான் அந்த சமயத்தில் பல்வேறு பேட்டிகளை கொடுத்தேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் படி பலரும் கூறினார்கள். எனக்கு பேட்டி கொடுத்து டயர்டு ஆகி விட்டது. நான் திருச்சூரில் இருந்து வந்த ஒரு சிறிய பெண், அவர்கள் சொன்னதை தான் நான் அப்படியே பின்பற்றி செய்தேன். படம் வெளியான பிறகு எனக்கு மிகக் குறைந்த நேரமே திரையில் இருந்தது. அதற்காக என்னை ட்ரோல் செய்தார்கள். நான் சொந்த பப்ளிசிட்டிக்காக அதிக பேட்டிகள் கொடுத்தேன் என என்னை விமர்சித்தார்கள்.
அதனால் நான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானேன். அதனால் நான் மலையாள சினிமா துறையிலிருந்து விலகி இருக்க முடிவு செய்தேன். எனக்கு வந்த பட வாய்ப்புகளையும் நிராகரித்தேன். அந்த நேரத்தில் தான் ஒரு முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் நெகட்டிவ் ரோலில் நடிக்க கேட்டார்கள். பலரும் எனக்கு நடிக்க தெரியாது என ட்ரோல் செய்து இருந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கவே இதை ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டு நடித்தேன். ஒரு புதிய மொழியை கற்றுக் கொண்டேன், அதன் பிறகு மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அதன் பின் தமிழுக்கு வந்தேன். அப்படியே பயணம் சென்று கொண்டிருக்கிறது" என அனுபமா கூறியிருக்கிறார்.
பிரேமம் படம் வந்து 5 வருடங்கள் ஆகும் நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு பிரேமம் என்று தான் பெயர் வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கையையே மாற்றிய படம் அது தான், இது பற்றி பேசியிருந்த அவர், "பிரேமம் படத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. கொரோனா பிரச்சனையைத் தாண்டி இதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் காரணமாகத் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். யாருக்காவது அனுபவமாவை தெரியும் என்றால் அதற்கு காரணம் மேரி ஆகத் தான் இருக்கும். அந்த கதாப்பாத்திரம் போல வேறு எந்த கதாபாத்திரமும் இவ்வளவு அழுத்தமாக இருக்கவில்லை. ஐந்து வருடம் ஆகிவிட்டது என்பதை கூட என்னால் நம்ப முடியவில்லை. பாடல் வெளியானது, படம் வெளியானது, அதன் பிறகு வந்த ட்ரோல்கள், தெலுங்கில் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்தது, தற்போது மொத்தம் 13 படங்கள் நடித்திருப்பது என அனைத்தும் நடந்திருக்கிறது.
நான் நடிக்க விரும்பியது உண்மை தான், நான் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது வாழ்க்கை இது. அல்போன்ஸ் புத்ரன் என் வாழ்க்கையில் ஒரு தேவதையாக வந்து, எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றி விட்டார், அதனால் தான் எங்களுடைய வீட்டுக்கு பிரேமம் என பெயர் வைத்திருக்கிறோம்.
மேலும் கடந்த 5 வருடங்களில் குறைந்த அளவிலான மலையாள படங்களில் மட்டுமே நடித்து இருப்பதற்கான காரணத்தை கேட்டதற்கு, "பிரேமம் படம் வெளியான பிறகு என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சித்தார்கள். என்னை திமிர் பிடித்தவள் என்றும் அகங்காரி என்றும் விமர்சித்தார்கள். நான் அந்த சமயத்தில் பல்வேறு பேட்டிகளை கொடுத்தேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் படி பலரும் கூறினார்கள். எனக்கு பேட்டி கொடுத்து டயர்டு ஆகி விட்டது. நான் திருச்சூரில் இருந்து வந்த ஒரு சிறிய பெண், அவர்கள் சொன்னதை தான் நான் அப்படியே பின்பற்றி செய்தேன். படம் வெளியான பிறகு எனக்கு மிகக் குறைந்த நேரமே திரையில் இருந்தது. அதற்காக என்னை ட்ரோல் செய்தார்கள். நான் சொந்த பப்ளிசிட்டிக்காக அதிக பேட்டிகள் கொடுத்தேன் என என்னை விமர்சித்தார்கள்.
அதனால் நான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானேன். அதனால் நான் மலையாள சினிமா துறையிலிருந்து விலகி இருக்க முடிவு செய்தேன். எனக்கு வந்த பட வாய்ப்புகளையும் நிராகரித்தேன். அந்த நேரத்தில் தான் ஒரு முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் நெகட்டிவ் ரோலில் நடிக்க கேட்டார்கள். பலரும் எனக்கு நடிக்க தெரியாது என ட்ரோல் செய்து இருந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கவே இதை ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டு நடித்தேன். ஒரு புதிய மொழியை கற்றுக் கொண்டேன், அதன் பிறகு மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அதன் பின் தமிழுக்கு வந்தேன். அப்படியே பயணம் சென்று கொண்டிருக்கிறது" என அனுபமா கூறியிருக்கிறார்.