ஆப்நகரம்

முட்டாள், சுயநலவாதினு விளாசிய நட்டி: ஃபீல் பண்ணி மன்னிப்பு கேட்ட அனுராக் கஷ்யப்

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டியிடம் பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Samayam Tamil 7 Jun 2020, 11:15 am
பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி தற்போது படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் பாலிவுட் படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவரும், பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும் நண்பர்கள் ஆவர்.
Samayam Tamil anurag kashyap


இந்நிலையில் நட்டி தன் நண்பரை விளாசி பல ட்வீட்டுகள் போட்டார். அந்த ட்வீட்டுகளில் நட்டி கூறியிருந்ததாவது,

சத்யா படத்தின் எழுத்தாளர்களில் அனுராக் கஷ்யப்பும் ஒருவர். அதன் பிறகு அவர் எங்களுடன் சேர்ந்து பான்ச் படத்தை எடுத்தார். நான் சம்பளம் வாங்காமல் அவருக்கு வேலை செய்தேன். லாஸ்ட் ட்ரெய்ன் டூ மஹாகாளிக்கும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. நான் அவருக்காக வேலை செய்திருக்கிறேன். ஆனால் அவரோ நண்பர்களை தள்ளி வைத்திருக்கிறார்.

அனுராக் என்னை மறந்துவிட்டு நான்சென்ஸாக பேசுகிறார். அவரை பற்றி தெரிந்தவர்களிடம் கேளுங்கள். அவர் முட்டாளை தவிர வேறு எதுவும் இல்லை. முட்டாள் முட்டாளாகவே இருப்பார். நான் ஒரேயொரு சுயநலவாதி அனுராக் கஷ்யப் பற்றி மட்டுமே பேசுகிறேன் என்றார்.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியான பிளாக் ஃப்ரைடே படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி. அதன் பிறகு அவர்கள் சேர்ந்து படம் பண்ணவில்லை. இந்நிலையில் தான் நட்டி அனுராக் கஷ்யப்பை முட்டாள், சுயநலவாதி என்று விளாசினார்.

நட்டியின் ட்வீட்டுகள் குறித்து அறிந்த அனுராக் கஷ்யப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நட்டி நட்ராஜின் கோபம் குறித்து மீடியாவில் வந்தது பற்றி நிறைய படிக்கிறேன். அவர் எனக்கு வெறும் நண்பர் மட்டும் அல்ல நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் சினிமாவில் வளர்ந்தோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என் ஷாட்டை கேமராமேனிடம் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியாதபோது அவர் தான் சொல்லிக் கொடுத்தார். அவர் என் ஆசிரியர், கேமராவை எப்படி மூவ் செய்வது என்று காண்பித்தார். அவர் லாஸ்ட் ட்ரெய்ன் டூ மஹாகாளி, பான்ச் மற்றும் பிளாக் ஃப்ரைடே ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தார்.

என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே நட்டி நட்ராஜ் தான். நட்டி தான் என்னை இயக்குநர் பாலாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அவர் தான் என்னை ரஜினி சாரை சந்திக்க வைத்தார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தமிழ் படத்தை எனக்கு போட்டு காண்பித்தார். அதுவும் சப்டைட்டில் இல்லாமல். அது தான் நான் பார்த்த முதல் தமிழ் படம்.
அதன் பிறகே நான் தமிழ் சினிமா பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். என்னிடம் இருந்த எதிர்பார்ப்பால் அவர் தான் காயப்படுத்தப்பட்டதாக நினைத்து கோபப்பட அனைத்து உரிமையும் உள்ளது. இது இரண்டு நண்பர்களுக்கு இடையேயானது. அவர் அன்பு மற்றும் நேர்மைக்கு பெயர்போன இடத்தை சேர்ந்தவர்.

நட்டி நட்ராஜ் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நான் தற்போது தான் அவரிடம் போனில் பேசினேன். அவர் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அதனால் அவரை விட்டுவிடவும். இதை என் அதிகாரப்பூர்வ அறிக்கையாக எடுத்துக் கொள்ளவும். அவர் காயப்பட்டது உண்மை. தேவைப்படும்போது அவருக்காக நான் இல்லை. அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. ஐ ஆம் சாரி நட்டி என்று தெரிவித்துள்ளார்.

அனுராக் கஷ்யப் மன்னிப்பு கேட்டு போட்ட ட்வீட்டை பார்த்த நட்டி, நன்றி அனுராக் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்