ஆப்நகரம்

தமிழர்களின் வீர விளையாட்டு படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இந்தி பட இயக்குனர்!

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்..

Samayam Tamil 19 Jun 2018, 4:04 pm
பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்..
Samayam Tamil Anurag-Kashyap


நடிகர் அதர்வா தற்போது நடித்து வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தமிழில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் இவர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழில் உருவாகும் ஒரு படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடைக்குக்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது. உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து, போராட்டத்தின் பின்னணி, காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவையையும் சேர்த்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராடியது எவ்வாறு என்பதனை இந்த படம் மூலம் தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் இயக்குனர் சந்தோஷ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்