ஆப்நகரம்

தனுஷ், விஜய்சேதுபதி கூட்டணியில் படம் இயக்க ஆசை- அனுராக் காஷ்யப்

’இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Aug 2018, 7:36 pm
’இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anurag-kashyap-cover-pic
தமிழில் படம் இயக்கும் அனுராஜ் காஷ்யப்..??


இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளராகவும், வசனக்கர்த்தாவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

இந்தியில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘அகிரா’ படத்தில் வில்லனாக நடித்து சிறந்த நடிகனாகவும் தன்னை நிரூபித்தார். தமிழில் நயன்தாரா, அதர்வா நடிப்பில் விரைவில் வெளிவரும் ’இமைக்கா நொடிகள்’ படத்திலும் வில்லான அனுராக் காஷ்யப் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழ் நடிகர்களான தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாலிவுட் படங்களை தொடர்ந்து விரைவில் அனுராக் காஷ்யப் தமிழில் படங்களை இயக்கலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர் கொலைகளை நிகழ்த்தும் சைக்கோ கொலைகாரன் பற்றிய படமாக தயாராகியுள்ள ’இமைக்கா நொடிகள்’ நாளை உலகளவில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்