ஆப்நகரம்

டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட நடிகை அனுஷ்கா: ரசிகர்களை கலங்கவைத்த வீடியோ

டிவி நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்கா கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

Samayam Tamil 23 Mar 2020, 7:41 pm
நடிகை அனுஷ்கா ஷெட்டி பாகுபலி படத்திற்க்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இடைவெளி எடுத்துக்கொண்டார். அதன்பிறகு தற்போது அவர் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil Anushka Shetty


அந்த படத்தில் விளம்பரத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் நடிகை அனுஷ்கா. அப்படி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரை பற்றி ஒரு வீடியோ காட்டினார்கள்.

அதை பார்த்துவிட்டு அனுஷ்கா அழ ஆரம்பித்துவிட்டார். காரணம் அந்த வீடியோவில் அருந்ததி பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இருந்தது தான். அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தை இயக்கியவர் அவர். சென்ற வருடம் பிப்ரவரியில் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.

அவரை நினைத்து தான் அனுஷ்கா கண்ணீர் சிந்தியுள்ளார். அனுஷ்காவை நடிகையாக தென்னிந்திய சினிமாவில் நிலைநாட்டியது இந்த படம் தான். அருந்ததி மூலமாக புகழில் உச்சிக்கே சென்றார் அனுஷ்கா. அவரது மரணத்தை தாங்க முடியாமல் தான் அவர் கண்ணீர் விட்டுள்ளார்.

அவர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் என உருக்கமாக பேசினார் அனுஷ்கா. அவர் அழுவதை பார்த்து செட்டில் இருந்த மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்