ஆப்நகரம்

நடக்காது என நினைத்தது எல்லாம் நடக்கிறது: கொரோனா பற்றி அனுஷ்கா உருக்கமான பதிவு

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா. என்ன கூறியுள்ளார் பாருங்க..

Samayam Tamil 8 Apr 2020, 9:26 am
கொரோனாவால் மனித இனத்திற்கே பெரிய சிக்கல் வந்திருக்கிறது. உலகம் முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 81 ஆயிரம் நபர்களுக்கும் மேல் பலி ஆகியுள்ளனர்.
Samayam Tamil Anushka


நாடு, இனம், ஏழை, பணக்காரன் என எந்த வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா பாதித்து வருகிறது. இது பற்றி நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"நாம் பிரிவுற்று இருப்பதாக உணர்ந்தால் நாம் பிரிந்து தான் இருப்போம். ஆனால் ஒற்றுமையுடன் இருந்தால்..

நம் வாழ்க்கை பற்றி நாம் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு.. முற்றிலும் ஒரு புதிய கோணத்தில்.. நாம் நடக்காது என நினைத்தது எல்லாம் நடக்கிறது, வாய்ப்புகள் அனைத்தும் மறைந்துவிட்டது.

நாம் நேரம், இடம் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலும், நமக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் பிராத்திப்போம். நமது பாதுகாப்பிற்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் வார்த்தைகளால் நன்றி கூறிவிட முடியாது.

நாம் இதில் இருந்து வெளியில் வந்த பிறகு நாம் உணர வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது, மற்றவர்களுக்காக வெவ்வேறு நேரங்களில், இடங்களில் பணியாற்றுகிறார்கள். யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை" என அனுஷ்கா தனது பதிவில் கூறியுள்ளார்.


சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை அனுஷ்கா தற்போது நிசப்தம் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். அந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்தபிறகு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்