ஆப்நகரம்

அப்பா நல்லா ரெஸ்பான்ட் பண்றார்: குட் நியூஸ் சொன்ன எஸ்.பி சரண்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Aug 2020, 5:31 pm
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கிறார். கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil sp balasubrahmanyam


மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரின் மகன் சரண் மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்த பிறகு தினமும் வீடியோ வெளியிட்டு அப்டேட் கொடுக்கிறார்.

இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் சரண் கூறியிருப்பதாவது,
எல்லாம் நார்மலாக இருக்கிறது. நேற்று நான் கூறியது போன்றே அப்பா நன்றாக ரெஸ்பான்ட் செய்கிறார். செடேஷனில் இருந்து 90 சதவீதம் வெளியே வந்துவிட்டார். என் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எம்.ஜி.எம். மருத்துவமனை, டாக்டர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

விரைவில் அப்பாவை சந்திப்போம் என்று நம்புகிறோம். நிறைய பேர் என்னை தமிழில் போஸ்ட் போடுமாறு கூறுகிறார்கள். அப்பாவுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பேசி வீடியோ வெளியிடுவது கடினம். நான் பிரார்த்தனை செய்கிறேன், டாக்டர்களுடன் பேசி வருகிறேன், அப்டேட் கொடுக்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று புரியாதவர்களுக்கு தயவு செய்து எடுத்துச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ப்ளீஸ், இனிமே எஸ்.பி.பியை மருத்துவமனைக்கு சென்று பார்க்காதீங்க சரண்: ரசிகர்கள்

அப்பா கண் திறந்து பார்க்கிறார், சைகையால் பேசுகிறார், ஆட்களை அடையாளம் கண்டுகொள்கிறார் என்று சரண் நேற்று தெரிவித்திருந்தார். 2 வாரங்கள் கழித்து அப்பாவை மருத்துவமனையில் சந்தித்து பேசியதாக சரண் கூறினார். அதை பார்த்த ரசிகர்களோ, தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதனால் அவரை மருத்துவமனையில் சந்திக்க வேண்டாம் என்று சரணுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்