ஆப்நகரம்

இந்த விசயத்துக்காகத்தான் அப்பவே ஏ.ஆர்.முருதாஸிடம் இருந்து அஜித் விலகினாரா?!

ஏ.ஆர்.முருகதாஸின் கதை விசயம் தெரிந்துதான் அப்போது நடிகர் அஜித் ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 1 Nov 2018, 6:20 pm
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். எஸ்.ஜே.சூர்யா, அஜித்தை வைத்து ‘வாலி’ படத்தை இயக்கினார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு ஏ.ஆர்.முருகதாஸுக்கு கிடைத்தது. அஜித் திரைப்பயணத்தையே மாற்றிய படம் ‘தீனா’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலமாக தான் அஜித்திற்கு ‘தல’ என்ற பட்டம் கிடைத்தது.
Samayam Tamil ajith-murugadoss


அதையடுத்து விஜயகாந்த்தை வைத்து ‘ரமணா’ என்ற படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படமும் வெற்றி பெற்றது. அதன் பின் முருகதாஸ் வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். ஆனால், ‘ரமணா’ படத்தின் கதை நந்தகுமார் என்கிற உதவியாளரிடம் இருந்து திருடியுள்ளார் முருகதாஸ். பிறகு படத்தை வெளியிடவுள்ள சமயத்தில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. பிறகு அந்த உதவி இயக்குனரை அழைத்த விஜயகாந்த் பணத்தை கொடுத்து விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து படத்தை வெளியிட்டனர்.

இந்த பிரச்சனை அஜித்துக்கு தெரியவந்ததும் முருகதாஸ் மீது வைத்திருந்த நம்பிக்கை கைவிட்டார் அஜித். அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்கவேண்டும் என பல முறை முயற்சி செய்தும் அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. இதற்கிடையில் ’மிரட்டல்’ என்ற தலைப்பில் அஜித்தை வைத்து முருகதாஸ் படம் இயக்கவுள்ளதாக போஸ்டர்கள் வெளியானது. அதற்கும் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படம் டிராப்பானது.

தற்போது மீண்டும் ‘சர்கார் திருட்டு கதையில் வசமாக சிக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித்தை வைத்து இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்