ஆப்நகரம்

ஏ ஆர் முருகாதாஸ் தொடங்கி வைத்த விஜயகாந்த் மகனின் அடுத்த அதிரடி!!

சண்முகபாண்டியன் மூன்றாவதாக நடிக்கும் படத்தின் டைட்டிலை ஏ ஆர் முருகதாஸ் நேற்று அறிமுகப்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மித்ரன் எனும் பெயரில் போலீஸ் கதையாக இப்படம் உருவாகிறது

Samayam Tamil 13 Jul 2019, 11:43 am
நடிகர் விஜயகாந்தின் மூத்தமகன் பிரபாகரன் அரசியலில் களமிறங்கி சர்ச்சைகள் மூலம் பிரலபலமாகி வருகிறார். இளைய மகன் சண்முகப்பாண்டியன், திரைப்படங்களில் நடித்து வருகிறார். சண்முகப்பாண்டியன் திரை அறிமுகம் சரியாக அமையவில்ல. அதனால் அவர் அடுத்தடுத்த படங்களை வெகு கவனமுடன் தேர்ந்தெடுத்து வருகிறார்.மதிரை வீரன் படம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத்தந்ததது. சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து சண்முகபாண்டியன் மூன்றாவதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கிறது.
Samayam Tamil D_HxtrGUcAcBQVM


இப்படத்தின் பெயரை நேற்று ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார். மித்ரன் எனும் பெயரில் போலீஸ் கதையாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சண்முகப்பாண்டியனுடன் ரோனிகா சிங், அர்ச்சனா, அழகம் பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

சிறுத்தை சிவாவிடம் நான்கு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாளன் இப்படத்தை இயக்குகிறார் இந்த மித்ரன் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது..

காஞ்சிவரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்த விஜயகாந்த், அதையடுத்து மித்ரன் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார், விஜய்காந்த் பிரேமலதா இருவரும் இணைந்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். மீடியா முதல் சினிமாகாரர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் படம் பற்றிய முதல் தகவலாக ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தின் டைட்டிலை நேற்று அறிமுகப்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

படக்குழு மிகத்தீவிரமாக ஷீட்டிங்க்கை நடத்தி வருகிறது. சன்முகப்பாண்டியன் போலீஸ் கேரக்டருக்காக உடலை முழுதாக மாற்றி நடித்து வருகிறார். படத்திற்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்