ஆப்நகரம்

மீண்டும் துப்பாக்கியை கையிலெடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Jan 2019, 4:11 pm
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். சமீபத்தில் விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான படம் ‘சர்க்கார்’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் ஒரு தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டார். இந்த விருது விழாவில் இயக்குநர் முருகதாஸுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக பொறுப்பாளிக்கான விருது வழங்கப்பட்டது.
Samayam Tamil vijay murugadoss.


விழாவில் பேசிய முருகதாஸ் சமூக பொறுப்புணர்வு எல்லா இயகுனர்களுக்கும் இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த முருகதாஸ், ’நிச்சயமாக ‘துப்பாக்க்கி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும்’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்