ஆப்நகரம்

ரஜினியை அடுத்து தெலுங்கு முன்னணி நடிகருடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!

தற்போது ரஜினியை வைத்து இயக்கவுள்ள பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுடன் இணையவுள்ளார்.

Samayam Tamil 8 Mar 2019, 8:43 pm
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேரடிப் படங்களை இயக்கியுள்ளார்.
Samayam Tamil allu-arujun


மூன்று மொழிகளிலுமே மிகப் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். அதிலும் ஹிந்தியில் அவர் இயக்கிய ‘கஜினி’ திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்தது குறிப்பிடத்தக்கது. மூன்று மொழிகளிலும் மாறி மாறி படங்களி இயக்கி வரும் முருகதாஸ் இப்போது ரஜினியை வைத்து இயக்கும் தனது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் மற்று தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ‘ஸ்டாலின்’ என்ற படத்தையும் மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ எனும் படத்தையும் முருகதாஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்