ஆப்நகரம்

’சர்கார்’ வெற்றிபெற காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்த இயக்குநர் முருகதாஸ்!

சர்கார் படம் வெற்றிபெற வேண்டி , இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

Samayam Tamil 1 Nov 2018, 6:15 pm
சர்கார் படம் வெற்றிபெற வேண்டி , இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
Samayam Tamil amnknk


விஜய் நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் ’சர்கார்’ . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது . செங்கோல் என்ற பெயரில் பதிவுசெய்து வைத்திருந்த கதையை வைத்து எடுக்கப்பட்டதே சர்கார் படம் என உதவி இயக்குநர் வருண் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சர்க்கார் ஏற்பட்டது செங்கோல் என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கதையை வைத்து எடுக்கப்பட்டதே சர்கார் படம் என உதவி இயக்குநர் வருண் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சர்கார் கதைக் கரு சர்ச்சையைத் தொடர்ந்து , இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதால், பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், சர்கார் படம் வெற்றியடைய வேண்டி இன்று காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசிக்க வந்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு சாதாரண பக்தர் போல தனியாகவே கோயிலுக்கு வந்ததால், முருகதாஸ் வருவதை யாரும் கவனிக்கவில்லை.

காமாட்சி அம்மனை தரிசித்தபோது, முருகதாஸை அடையாளம் கண்டுகொண்ட அர்ச்சகர் ஒருவர், அந்த விவரத்தை பூஜைசெய்து கொண்டிருந்த அர்ச்சகரிடம் கூறியிருக்கிறார். பிறகு, விரைவாக தரிசனத்தை முடித்துக்கொண்ட முருகதாஸ், கூட்டம் கூடுவதற்குள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்