ஆப்நகரம்

நாங்க போட்டாச்சு..? அப்போ நீங்க.?: வைரலாகும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ஸ்டாகிராம் பதிவு!

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Samayam Tamil 7 Jun 2021, 1:26 pm
கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டு கொள்வதே ஒரே வழி என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் மக்களை தடுப்பூசி எடுத்துக்க சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil AR Rahman
AR Rahman


தமிழ் நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அந்தந்த மாநில அரசுகள் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகின்றனர்.

உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?: ரசிகர்களின் விவகாரமான கேள்விகளுக்கு விவரமாக பதிலளித்த ஸ்ருதிஹாசன்!
அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்ட பின்பு தனது மகனுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ’நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் நீங்கள் போட்டு விட்டீர்களா? என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படம் தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்