ஆப்நகரம்

மறைந்த நா.முத்துக்குமாரின் கடைசி பாடல் வரிகளுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடைசியாக எழுதிய பாடல் வரிசகளுக்கு இசையமைத்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Samayam Tamil 27 Oct 2018, 4:55 pm
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே பல விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் படம் 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிங்கப்பூர் திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிடப்படவுளளது.
Samayam Tamil sarvam-thaala-mayam


இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தின் பாடல் வரிகள் தான் என்ற செய்தியை மணமுறுகி ராஜிவ் மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்’’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்