ஆப்நகரம்

விரைவில் ரூ.2000 கோடி வசூலிக்கும்: 'பாகுபலி' குழுவுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு!!

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

TNN 22 May 2017, 10:42 am
சென்னை: எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ar rahman lauds team baahubali
விரைவில் ரூ.2000 கோடி வசூலிக்கும்: 'பாகுபலி' குழுவுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு!!


சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக வெற்றி வாகைச் சூடி வருகிறது. சர்வதேச அளவில் ரூ.1500 கோடி வசூலை எட்டி தினசரி ஒரு சாதனை படைத்து வரும் 'பாகுபலி 2' திரைப்பத்தை பார்த்த பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் தனது வாழ்த்துக்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில்,'தற்போதுதான் சென்னையில் ‘பாகுபலி-2’ படத்தை பார்த்தேன். இப்படம் ரூ.2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என நம்புகிறேன். ராஜமௌலியும், கீரவாணியும் தென்னிந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்' என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த பாராட்டு படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக இயக்குனர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார்.

Finally, Academy-award winning music composer AR Rahman has watched Baahubali 2 in Chennai. Rahman wishes that Baahubali should touch 2000cr and above at the box office.

அடுத்த செய்தி

டிரெண்டிங்