ஆப்நகரம்

AR Rahman மோசமான ரீமிக்ஸ்; மறைமுக பதிலடி கொடுத்த ஏ ஆர் ரஹ்மான்!

தனது பாடலை மோசமாக ரீமிக்ஸ் செய்துள்ளவர்களுக்கு வஞ்சப்புகழ்ச்சியாக பதிலடி கொடுத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

Samayam Tamil 9 Apr 2020, 10:31 am
ஆஸ்கர் நாயகன், இசைப் புயல் என போற்றப்படும் ஏ ஆர் ரஹ்மானுக்கு ரீமிக்ஸ் பாடல்கள் என்றாலே எரிச்சலாக இருக்கிறது என்று சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது பாடலையே மோசமாக ரீமிக்ஸ் செய்துள்ளனர். அதுவும் கேட்க சகிக்கமுடியாத அளவுக்கு இருப்பதாக ரஹ்மான் ரசிகர்கள் மனம் நொந்துள்ளனர். அந்த பாடலைப் பற்றி குறிப்பிடாமல், சர்க்காஸ்டிக் வழியில் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.
Samayam Tamil ar rahman


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இதோ



ஏ ஆர் ரஹ்மான் குழு உருவாக்கிய மசாக்கலி பாடலைப் பற்றிதான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஷார்ட் கட்ஸ் இல்லை, முறையாக நியமனம் செய்து, பல இரவுகள் தூங்காமல் கண்விழித்து, எழுதி, எழுதி, 200 இசைக் கலைஞர்களைக் கொண்டு, 365 நாட்களும் மண்டையை உடைத்து கிரியேட்டிவாக யோசித்து பல தலைமுறைகளுக்கான இசையை உருவாக்க பாடுபடுகிறோம் எனும் பொருள்படத்தக்க வகையில் குறிப்பிட்டுள்ளார் ரஹ்மான்.



இந்த ட்வீட்டை பார்த்த அனிருத் ரிட்வீட் செய்து மொசார்ட் ஆன் ஃபயர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இசையமைப்பாளர் தமன்னும் இதை பகிர்ந்துள்ளார்.


தமன் இந்த ட்வீட்டை பகிர்ந்து ஆமாம் நிச்சயமாக ஃபயர்தான். உண்மையான மாஸ்டர் பீஸ் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ரசிகர்களும் சரியாக புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு ட்வீட் செய்து வருகின்றனர்.



தலைவா இப்பதான் அந்த ரிமேக் வெர்சன் கேட்டுட்டு வரேன் என வரேன் கமெண்டியுள்ளார். மேலும் பல ரசிகர்களும் இந்த ரீமேக் வெர்சன் பாடலைக் கேட்டு கொதித்துப் போயுள்ளனர். ரஹ்மானின் இசையை கெடுத்துவிட்டீர்கள் என அவர்கள் பொங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்