ஆப்நகரம்

ரஜினிக்கு வாழ்த்து, ரசிகர்களுக்கு நன்றி: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

இசை உலகில் 25 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

TNN 4 Jan 2018, 6:10 pm
இசை உலகில் 25 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ar rahman thanks his fans for their support over 25 years
ரஜினிக்கு வாழ்த்து, ரசிகர்களுக்கு நன்றி: ஏ.ஆர்.ரகுமான் பேட்டி


இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரோஜா திரைப்படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் பல வெற்றிப்படங்களை அளித்து இசையால் உலகையே கட்டிப்போட்ட அவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரு ஆஸ்கர் விருதுகளையும் வென்றார்.

ஆஸ்கர் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கு என்று கூறி தமிழின் பெருமையையும் உலக அளவில் எடுத்துச்சென்றார். அவரது நீண்ட நெடிய இசைப்பயணம் 25 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில் சென்னையில் 2 நாட்கள் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

இதனை முன்னிட்டு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரகுமான், 25 ஆண்டுகளாக தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி கூறினார். மேலும், அரசியலில் களமிறங்குவதை அறிவித்த ரஜினிக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி யோசித்து முடிவுசெய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்