ஆப்நகரம்

இருவேடங்களில் நடிக்கும் அரவிந்த்சாமி!

நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.

Samayam Tamil 24 Jan 2019, 5:46 pm
நடிகர் அரவிந்தசாமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செக்க சிவந்த வானம்’. அதையடுத்து அவர் நடித்து முடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசுரன்’ ஆகிய படங்கள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகவுள்ளன.
Samayam Tamil aravindsamy


இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி தற்போது ‘கள்ளபார்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ‘சலீம்’ பட இயக்குனர் நிர்மல்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த்சாமி. இந்தப் படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்ட் மதியழகன் தயாரிக்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் மதியழகன் கூறுகையில், ‘‘இது ஒரு முழு நீள ஆக்ஷன் படம். கதையில் நாயகன் அரவிந்த்சாமி இரு வேடங்களில் நடிக்கிறார். ஆகையால், கேரக்டருக்காக தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது. படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்