ஆப்நகரம்

அனிருத் தெலுங்கு பட இசையை புரிந்து கொள்ளவில்லை: இயக்குனர் த்ரிவிக்ரம்!

இசையமைப்பாளர் அனிருத், தெலுங்கு ரசிகர்களின் ரசனையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Oct 2018, 2:35 pm
தமிழில் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இவரை அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ். அனிருத் இசையமைத்த முதல் படம் தனுஷ் நடித்த ‘3’. அதையடுத்து அஜித், சிவகார்த்திகேயன் உட்பட பலருக்கும் இசையமைத்துள்ளார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கிறார்.
Samayam Tamil anirudh


இவரை தனுஷ் தான் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதன் பின் தனது கடின உழைப்பாலேயே அவர் இந்த உயர்ந்த இடத்தில் நீடித்து கொண்டிருக்கிறார். இவ்வாறு தமிழில் முன்னணியில் இருக்கும் இவர் போன வருடம் தான் த்ரிவிக்ரமின் ‘அஞ்ஞாதவாசி’ படத்தின் மூலம் தெலுங்குக்கு அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் த்ரிவிக்ரம் தனது அடுத்த படத்திலும் அனிருத்தை சேர்த்தார். பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அனிருத்தை கழட்டிவிட்டு இசையமைப்பாளர் தமனை சேர்த்தார்.

இந்தப் படம் நேற்று வெளியானது. தற்போது அனிருத்தை கழட்டிவிட்டதற்கான காரணத்தை த்ரிவிக்ரம் தற்போது கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘இந்த படத்தின் பூஜைகளில் எல்லாம் ‘அனிருத் கலந்து கொண்டார். ஆனால் அவர் இந்த படத்திற்கு சரியான தேர்வு அல்ல என நினைத்தேன். அதை பற்றி அவரிடமே பேசினேன். அவர் இன்னும் தெலுங்கு ரசிகர்களின் ரசனையை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு சில காலம் ஆகும்’’ என்றார் த்ரிவிக்ரம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்