ஆப்நகரம்

மீண்டும் தொடங்கிய 'அருண் விஜய் 31'

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Samayam Tamil 9 Dec 2020, 8:11 am
தமிழ் சினிமாவில் மிக நீண்ட போராட்டத்தைக் கடந்து தனக்குரிய தனித்துவமான இடத்தை அடைந்த நடிகர்களில் அருண் விஜய் முக்கியமானவர். 'தடையற தாக்க', 'என்னை அறிந்தால்' படங்களுக்கு பிறகு அவர் தொடங்கிய செகண்ட் இன்னிங்க்ஸ் வெற்றிகளை படைத்து வருகிறது. 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'தடம்', 'மாஃபியா' என தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களை தந்துக் கொண்டிருக்கும் அருண் விஜய், தற்போது ’அக்னி சிறகுகள்’, ’பாக்ஸர்’, ’சினம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனுடன் அறிவழகன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் அருண் விஜய் நடிக்கிறார்.
Samayam Tamil Arun Vijay


இப்போது 'அருண்விஜய் 31' என அழைக்கப்படும் இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் பணிகளில் சிறிய தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது இறுதிகட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் அறிவழகன், "நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கேமராவை காண்கிறேன். இதை நான் மிகவும் நேசிக்கிறேன். ஏனெனில் என்னை யாரென்று எனக்கு அடையாளம் காட்டியது இந்த கேமரா தான்" என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா: தெறிக்க விடும் சூர்யா ரசிகாஸ்

இதேபோல் நடிகர் அருண் விஜய்யும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இதற்கு இசையமைக்கிறார். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகுமென தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்