ஆப்நகரம்

மீண்டும் படிப்பைத் தொடரும் மருத்துவ மாணவி: உதவி செய்த ரசிகர் மன்றம்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ரங்கீலாவிற்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் கல்விக்கட்டணம் செலுத்த முன்வந்துள்ளனர்.

TNN 14 Sep 2017, 5:36 pm
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ரங்கீலாவிற்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் கல்விக்கட்டணம் செலுத்த முன்வந்துள்ளனர்.
Samayam Tamil ariyalur district vijay fans club come forward to help medical student who drop her studies
மீண்டும் படிப்பைத் தொடரும் மருத்துவ மாணவி: உதவி செய்த ரசிகர் மன்றம்


அரியலூர் மாவட்டம் பூவிருந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கீலா. கடந்த 2015ம் ஆண்டு நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1058 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து நடந்த மருத்துவக் கலந்தாய்வின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். முதலாம் ஆண்டு முடித்த அவருக்கு அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஜோஸ்பிரபு கல்விக்கட்டணம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், சொன்னபடி, அவர் உதவி செய்யாததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர், ஜோஸ்பிரபு என்பவர் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி என்றும், அவரது பொய்யான வாக்குறுதிக்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜோஸ்பிரபு, தான் தற்போதும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகியாக இருப்பதாகவும், மாணவி ரங்கீலாவிற்கு உதவி செய்ய இருந்ததாகவும் கூறினார். ஆனால், அரசியல் பின்னணியால் இந்தப் பிரச்சனை பூதாகரமாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தவித்து வந்த மாணவி ரங்கீலாவிற்கு அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவு தெரிவித்து, கல்விக்கட்டணம் கட்ட முன்வந்திருப்பது அவருக்கு ஆறுதலை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்