ஆப்நகரம்

பாகுபலியை பாராட்டித் தள்ளிய ஏ.ஆர்.ரகுமான்..!

’காற்று வெளியிடை’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், பாகுபலி திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

TNN 21 Mar 2017, 5:46 pm
’காற்று வெளியிடை’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், பாகுபலி திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
Samayam Tamil arr praised baahubali and telugu film industry
பாகுபலியை பாராட்டித் தள்ளிய ஏ.ஆர்.ரகுமான்..!


சென்னையில் நேற்று மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், பாகுபலி படத்தை வெகுவாக பாராடியுள்ளார்.

“பொதுவாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளுக்கும் ஒரு பாடலை இசையமைக்கும் போது, தெலுங்கு பாடல் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு தெலுங்கு மொழி அழகானது. ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த தென்னிந்திய திரையுலகம், பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்றது எனக்கு அப்போது வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது தனியாக நின்று தெலுங்கு திரையுலகம் சிறப்பாக வளர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது.

உங்களிடம் தற்போது பாகுபலி உள்ளது. அதன் மூலம் உலகையே உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளீர்கள். நீங்கள் இனி ஆண்டுதோறும் 4 பாகுபலிகளை கொடுக்க வேண்டும்.” என ஏ.ஆர்.ரகுமான் தெலுங்கு திரையுலகை பாராட்டி பேசியுள்ளார்.

ARR praised Baahubali and Telugu film industry

அடுத்த செய்தி

டிரெண்டிங்