ஆப்நகரம்

தளபதிக்கு பிறகு மணிரத்னத்துடன் இணைந்த பிரபலம் !!

29 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி இணைந்துள்ளார்.

Samayam Tamil 10 Sep 2019, 10:31 am
இயக்குநர் மணிரத்னம் பெரும் கனவுடன் இயக்கும் திரைப்படம் 'பொன்னியில் செல்வன்'. எம் ஜி ஆர், கமல் முதல் பலரும் பொன்னியின் செல்வன் நாவலை எடுக்க முயற்சி செய்த நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
Samayam Tamil images (1)


பொன்னியில் செல்வனை லைகா நிறுவனத்துடன் இணைந்து அவர் உருவாக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் மற்றும் நடிகர், தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

முழுக்க சோழர்களின் வரலாற்றை மையப்படுத்திய கதை என்பதால் அக்காலகட்டத்தையும், அரங்க அமைப்புகளையும் தத்ரூபமாக உருவாக்குவது மிகவும் முக்கியம். இந்த நிலையில் தான் நாயகன், தளபதி, படங்களுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கலை இயக்குநர் தோட்டா தரணி பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார்.

இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் முக்கியமான கலை இயக்குநர்களில் ஒருவர் தோட்டா தரணி. பல காலமாக சினிமாவில் இருந்தாலும் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்கள் மட்டுமே செய்யக்கூடியவர் தோட்டாதரணி. இவர் இரு முறை தனது படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார். பொன்னியின் செல்வனை உருவாக்க இவரே சிறந்த நபர் என ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

இப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, மலையாள நடிகர் ஜெயராம் , பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அமலா பால், மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி,த்ரிஷா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இஅசையமைக்க உள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுத உள்ளார்.
கல்கி என்கின்ற கிருஷ்ணமூர்தி அவர்களால் எழுதப்பட்ட "பொன்னியின் செல்வன்" என்ற பிரம்மாண்டமான நாவல் வெளிவந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த நாவல் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தது. இக்கதை, முழுக்க முழுக்க சோழர்களை மையமாக வைத்து எழுதப்பட்டது. எத்தனை முறை படித்தாலும், சலிப்புத்தட்டாத கதை இந்த பொன்னியின் செல்வன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்