ஆப்நகரம்

அருள்நிதியின் 12வது பட குறித்த புதிய அறவிப்பு!

அருள்நிதி நடிக்கவுள்ள 12வது படத்தைப் பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 3:58 pm
அருள்நிதி நடிக்கவுள்ள 12வது படத்தைப் பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil arulnidhi


நடிகர் அருள்நிதி தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் நடித்து வருகிறார். இது அரசியலை மையப்படுத்தி உருவாகிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்து வருகிறார். இதையடுத்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இந்தப் படம் வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அருள்நிதியின் 12வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் இணையவுள்ளார். இந்த படத்தை எஸ்.பி. திரைப்படாஸ் தயாரிக்கிறது. அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜூலையில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்