ஆப்நகரம்

போலீஸ் பற்றி இப்படி கூறுவதா.. ஹரியை விமர்சித்த பிரபல இயக்குனர்

'காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன்' என ஹரி கூறியிருப்பதை இயக்குனர் அருண் வைத்தியநாதன் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2020, 1:14 pm
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதல் நடத்தியதில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய தந்தை - மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதற்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
Samayam Tamil Hari


தவறு செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர்கை கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஹரி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

"சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன்" என ஹரி கூறி இருந்தார்.

இந்நிலையில் ஹரி இப்படி ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் சாடி இருப்பதை பிரபல இயக்குனர் அருண் வைத்தியநாதன் விமர்சித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது.

"சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் அதே அளவுக்கு, ஒட்டுமொத்த போலீஸ் துறையினரும் கெட்டவர்கள், காட்டு மிராண்டித்தனமானவர்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கோவிட் 19 பரவ துவங்கிய நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் போலீஸ் துறை பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து செய்தது என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு சில கருப்பு ஆடுகள் இருப்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் பொதுவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். இப்படிப் பட்ட கருப்பு ஆடுகள் பல துறைகளிலும் இருக்கிறார்கள்."

"குறிப்பாக.. சில சினிமா துறை நட்சத்திரங்கள் தாங்கள் போலீஸ் ரோலில் நடித்ததற்கும், போலீசை பெருமை படுத்தி படம் எடுத்ததற்கு வெட்கப்படுவதாக கூறி உள்ளனர். இது சினிமா ஸ்கிரிப்ட் இல்லை. கொஞ்சம் இடைவெளி கொடுங்கள். சில லைக்குகள் மற்றும் ரீட்வீட்களுக்காக இப்படி எமோஷனலாக பேசாதீர்கள்."

"இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டுமே நடத்துங்கள். உண்மையை ஆராய்ந்து அதன் பின்னால் உள்ளவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் தவறாக சித்தரிக்க வேண்டாம். ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் குடும்பத்திற்காக நான் பிராத்தித்து கொள்கிறேன். நீதி விரைவில் வழங்கப்படும் என நம்புகிறேன்" என கூறி உள்ளார் அருண் வைத்தியநாதன்.


மேலும் ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம் 2 மற்றும் 3வது படத்தின் நடித்த சூர்யா வெளியிட்டு இருந்த அறிக்கையில் "போலீஸாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌ைத ஜெயராஜ்‌, மகன்‌ ஃபென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்‌. நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, "இயந்திர கதியில்‌' சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌. சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்கவில்லை. இத்தகைய 'கடமை மீறல்‌' செயல்கள்‌, ஒரு குடிமகனின்‌ உரிமையில்‌ நம் 'அதிகார அமைப்புகள்‌' காட்டும்‌ அலட்சியத்தை வெளிச்சம்‌ போட்டு காட்டுகின்றன. அதனால்‌ இதுபோன்ற 'துயர மரணங்கள்‌' ஒரு வகையான 'திட்டமிடப்பட்ட குற்றமாக' (Organised Crime) நடக்கிறது," என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்