ஆப்நகரம்

"எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்".. பூஜையுடன் துவங்கிய அருண்விஜய் 33

அருண் விஜய் 33 பூஜையுடன் தொடங்கியது2

Samayam Tamil 4 Mar 2021, 12:05 am
சினிமாவில் ஜொலிக்க நடிப்பும், உழைப்பும் மட்டுமல்ல நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் தேவை என்பதற்கு சிறந்த உதாரணம் அருண்விஜய். 1995 ஆம் ஆண்டு வெளியான முறை 'மாப்பிள்ளை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். அதை தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் சொல்லி கொள்ளும்படியான வெற்றியையோ, பாராட்டு பெற கூடிய அளவுக்கான கதாபாத்திரமோ அமையவில்லை.
Samayam Tamil Arun Vijay 33 Launched


அப்பா விஜயகுமார், சகோதரிகள் என அனைவரும் பிசியான நட்சத்திரங்களாக சினிமாவில் ஜொலித்த சமயத்தில், சரியான வாய்ப்புகள் எதுவும் அமையாமல் தடுமாறி கொண்டிருந்தார் அருண்விஜய்.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் அருண்விஜய் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 1995 ல் தொடங்கி 2014 வரை சினிமாவில் ஜெயிக்க போராடிய அருண் விஜய்க்கு 'என்னை அறிந்தால்' திரைப்பட வெற்றி அதுவரை பட்ட காயங்களுக்கு மருந்தாக அமைந்தது.

தல அஜித்துக்கு வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் 'அதாரு அதாரு' என அஜித்துக்கு டஃப் கொடுத்து அருண் விஜய் நடித்த காட்சிகளுக்கு திரையரங்கில் விசில் சத்தங்களும், கைத்தட்டல்களும் பறந்தன. முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்து, கலங்கிய கண்களுடன் அருண் விஜய் வெளிவந்த காட்சி, காண்போர் அனைவரையும் கலங்க செய்தது.

அதை தொடர்ந்து குற்றம் 23, தடம் என அருண்விஜய் நடிப்பில் வெளியான படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. இதனிடையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி மூவருடனும் இணைந்து நடித்தார். 'துருவங்கள் பதினாறு' இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான 'மாஃபியா' திரைப்படம் தோல்வியை தழுவியது.

மாஃபியா தோல்விக்கு பிறகு 'மூடர்கூடம்' இயக்குநர் நவீனுடன் கை கோர்த்துள்ளார் அருண் விஜய். 'அக்னிச் சிறகுகள்' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த கையோடு ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அருண் விஜய்.

சாமி, வேல், சிங்கம் போன்ற கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த ஹரி, அருண் விஜய்யின் 33 வது படத்தை இயக்குகிறார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்