இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு 'யானை' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் இந்தப்படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் புதிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.
அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் 'யானை' படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் துவங்கி நடைபெற்ற நிலையில் திடீரென இயக்குனர் ஹரிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதால் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இராமேஸ்வரம், பழனி முதலான இடங்களில் 'யானை 'படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் 'யானை' படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டை முன்னிட்டு 'யானை' படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் 'யானை' படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் துவங்கி நடைபெற்ற நிலையில் திடீரென இயக்குனர் ஹரிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதால் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இராமேஸ்வரம், பழனி முதலான இடங்களில் 'யானை 'படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் 'யானை' படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டை முன்னிட்டு 'யானை' படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.