ஆப்நகரம்

மீண்டும் பேயுடன் சண்டை போடும் நடிகை அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா மீண்டும் பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 27 Aug 2018, 6:19 pm
நடிகை அனுஷ்கா மீண்டும் பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil anushka1


முதன் முறையாக நடிகை அனுஷ்கா, ‘அருந்ததி’ என்ற திகில் படத்தில் நடித்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்தது. ‘பாக்மதி’ திகில் படத்திலும் நடித்தார். ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய சரித்திர கதையிலும் நடித்தார்.

மேலும் புராண படமான ‘ஓம் நமோ வெங்கடேசாயா’ என்ற படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. ‘பாக்மதி’ படத்துக்கு பிறகு நடிப்புக்கு நீண்ட இடைவெளிவிட்ட நடிகை அனுஷ்கா, பல கோயில் குளங்களுக்குச் சென்று வழிபட்டார்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு பிறகு அவரது உடல் எடை கூடியதால், அதை குறைப்பதற்கான முயற்சி எடுத்து வந்தார். அதனால் அவர் பல படங்களை நிராகரித்தார். தற்போது ஒரளவு குறைத்து விட்டார். அதனால் நடிக்கத் தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் ‘சைலன்ட்’ என்ற திகில் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க அனுஷ்கா சம்மதித்துள்ளார். இதில் கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார். கோனா வெங்கட் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.
12 வருடத்திற்கு முன்பு வெளியான ‘ரெண்டு’ படத்துக்குப் பிறகு தற்போது மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை அனுஷ்கா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்