ஆப்நகரம்

பிஸியான நடிகையாகிவிட்ட ‘சைத்தான்’ நாயகி அருந்ததி நாயர்!

பிஸியான நடிகையாகிவிட்ட ‘சைத்தான்’ நாயகி அருந்ததி நாயர்!

TOI Contributor 14 Jun 2017, 3:26 pm
‘சைத்தான்’ படம் மூலம் அறிமுகமான அருந்ததி நாயர் தற்போது நான்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil arundhathi nair getting busy after saithan
பிஸியான நடிகையாகிவிட்ட ‘சைத்தான்’ நாயகி அருந்ததி நாயர்!


கேரளாவிலிருந்து இறக்குமதியான அருந்ததிநாயர் ‘சைத்தான்’ படம் தமிழில் அறிமுகமானார். இவர் ‘சைத்தான்’ படத்தில் ஜெயலட்சுமி, ஐஸ்வர்யா என இரண்டு விதமான வேடங்களில் நடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் கமிட்டாகாமல் கேரளாவிலேயே முகாமிட்டிருந்த அருந்ததி நாயர்.

தற்போது திடீரென்று ஒரே நேரத்தில் நான்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அருந்ததி நாயர் கூறுகையில், ‘‘’சைத்தான்’ படத்தில் எனக்கு வெயிட்டான நாயகி வேடம். அதன்பிறகும் அந்த மாதிரியான நல்ல வேடங்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். பலரும் என்னை கிளாமர் வேடத்தில் பார்க்கத்தான் நினைத்தார்கள். அப்படிப்பட்ட படங்களை நான் தவிர்த்து விட்டேன்.

இந்நிலையில், தற்போது அஜ்மலுடன் ‘ஜூலை 16’ -என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த ஹாரர் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடிக்கிறேன். மேலும் ‘யாவரும் வல்லவரே’ என்ற படத்தில் நடிக்கிறேன். ஐந்து கதைகளில் உருவாகும் இந்த படத்தில் சமுத்திரகனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும், ‘100 டிகிரி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கு இடையில் மலையாளத்தில் ஜூடு ஆண்டனியுடன் ‘அனுராகம்’ என்ற படத்தில் நடிக்கிறேன்.

ஆக, ‘சைத்தான்’ படத்திற்கு பிறகு கதை பிடிக்காமல் பல படங்களை தவிர்த்து வந்த நான் இந்த படங்களின் கதைகள் பிடித்துப் போய் நடித்து வருகிறேன். இந்த படங்கள் என்னை சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்த்தும் என்று உறுதியாக இருக்கிறேன் என்கிறார் அருந்ததி நாயர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்