விஜய் & அட்லி தற்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காம்போவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இது விஜய்யின் 63-வது படமாகும்.
இந்நிலையில் தன்னுடைய 64-வது படத்துக்கு பல இயக்குநர்களிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம் விஜய். இயக்குனர்கள் ஷங்கர், மோகன் ராஜா, வெற்றிமாறன் எனப் பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் விஜய்க்கு கதை வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.
இப்படி பல பெரிய இயக்குநர்கள் கதை சொல்லி வந்த நிலையில், சில புது இயக்குநர்களும் விஜய்யை அணுகி கதை சொல்லி வருகின்றனர். அதில் ‘மாநகரம்’பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் ஓகே சொல்லியதாகவும் தன்னுடைய நெருங்கிய நண்பரின் பேனரிலேயே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜாவும் விஜய்யிடம் மீனவர் தொடர்பான கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அதுவும் விஜய்க்குப் பிடித்துப் போக, தன்னுடைய பர்சனல் டைரியில் ஏற்றியிருக்கிறார். மேலும் இவர்களைத் தவிர புதுமுக இயக்குநர் ஒருவரிடமும் கதை கேட்டுள்ளாராம் விஜய்.
இந்நிலையில் தன்னுடைய 64-வது படத்துக்கு பல இயக்குநர்களிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம் விஜய். இயக்குனர்கள் ஷங்கர், மோகன் ராஜா, வெற்றிமாறன் எனப் பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் விஜய்க்கு கதை வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.
இப்படி பல பெரிய இயக்குநர்கள் கதை சொல்லி வந்த நிலையில், சில புது இயக்குநர்களும் விஜய்யை அணுகி கதை சொல்லி வருகின்றனர். அதில் ‘மாநகரம்’பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் ஓகே சொல்லியதாகவும் தன்னுடைய நெருங்கிய நண்பரின் பேனரிலேயே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜாவும் விஜய்யிடம் மீனவர் தொடர்பான கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அதுவும் விஜய்க்குப் பிடித்துப் போக, தன்னுடைய பர்சனல் டைரியில் ஏற்றியிருக்கிறார். மேலும் இவர்களைத் தவிர புதுமுக இயக்குநர் ஒருவரிடமும் கதை கேட்டுள்ளாராம் விஜய்.