ஆப்நகரம்

பிரபாஸுக்கு வில்லனாகும் முக்கிய தமிழ் நடிகர்

பிரபாஸ் 21வது படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியை அணுகியுள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின்.

Samayam Tamil 9 May 2020, 9:28 am
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடித்தபிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகர் ஆகிவிட்டார். அதன் பிறகு அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிந்தி ரசிகர்களை கவரும் வகையில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்றன.
Samayam Tamil Prabhas


பாலிவுட் வியாபாராத்தினை கருத்தில் கொண்டு தான் சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்து பிரபாஸ் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் தனது 20வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில் அதன் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது.

அந்த படத்தை முடித்தபிறகு பிரபாஸ் மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பிரபாஸின் 21வது படம் இது.

இதில் வில்லனாக நடிக்க நடிகர் அரவிந்த் சாமியை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பை பார்த்து வியந்த நாக் அஸ்வின், அவரை தன் படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். அதனை முடித்தபிறகு பிரபாஸ் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்