ஆப்நகரம்

ரம்ஜான் நோன்பால் படத்திற்கு பிரேக் விட்ட ஆர்யா!

ரம்ஜான் நோன்பு ஆரம்பித்துள்ளதால் தன்னுடைய படத்திற்கு பிரேக் விட்டுள்ளார் நடிகர் ஆர்யா.

TNN 1 Jun 2017, 7:57 pm
ரம்ஜான் நோன்பு ஆரம்பித்துள்ளதால் தன்னுடைய படத்திற்கு பிரேக் விட்டுள்ளார் நடிகர் ஆர்யா.
Samayam Tamil arya break for santhanadevan shooting on account of ramzan fasting
ரம்ஜான் நோன்பால் படத்திற்கு பிரேக் விட்ட ஆர்யா!


அமீர் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் ‘சந்தனத்தேவன்’.இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிக்கிறார். இந்தப் படத்தை ஆர்யா சொந்தமாக தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளதால், அமீர், ஆர்யா இருவரும்நோன்பு வைத்துள்ளனர். இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தியது என்பதால், படப்பிடிப்பில் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். நோன்பு இருந்து கொண்டு படத்தில் கடுமையாக உழைக்க முடியாது என்பதால், ரம்ஜான் முடியும் வரை இந்தப் படத்துக்கு பிரேக் விட்டிருக்கிறார்கள். இந்த இடைவெளியில் ‘வடசென்னை’ படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் அமீர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்