ஆப்நகரம்

ஆர்யாவின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது!

நடைபெற்று வந்த ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ திருமண நிகழ்ச்சி படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Mar 2018, 1:57 pm
நடைபெற்று வந்த ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ திருமண நிகழ்ச்சி படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil enga-veetu-mapillai-1


நடிகர் ஆர்யா பிரபல சேனல் ஒன்றில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடைசியாக வெற்றிபெறும் பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் நடிகர் ஆர்யா.. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்துகொண்டனர். தற்போது 8 பெண்கள் மட்டுமே இந்த போட்டியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமூக நல ஆர்வலர்கள் சிலரிடம் இருந்து நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளும், புகார்களும் வந்துகொண்டிருக்கிறது. இதன் மீது நீதிமன்ற வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த சிலர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அங்கு படப்பிடப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்