ஆப்நகரம்

ஆசையை எத்தனை நாள் தான் அடக்குறது: துணிந்துவிட்ட ஆர்யா

தலைப்பை பார்த்துவிட்டு நீங்கள் ஏதாவது தவறாக புரிந்து கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. நாங்கள் ஆர்யாவின் ட்வீட்டை பற்றி தான் சொல்கிறோம்.

Samayam Tamil 19 Apr 2020, 4:43 pm
பா. ரஞ்சித் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிப்பதற்காக ஆர்யா மாதக் கணக்கில் ஒர்கஅவுட் செய்து உடம்பை மரணமாக பில்ட் செய்துள்ளார். அவரை சட்டையில்லாமல் பார்ப்பவர்கள் மிரளும் அளவுக்கு பாடியை பில்ட் செய்திருக்கிறார்.
Samayam Tamil arya


இப்படி ஆர்யா தீவிரமாக ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்க அவரின் மனைவி சயீஷாவோ ஊரடங்கால் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் கேக் மேல் கேக் செய்து கொண்டிருக்கிறார். எத்தனை நாள் தான் ஆர்யாவும் கேக் சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பார்.



அதனால் தான் சயீஷா செய்த கப் கேக்குகளை சாப்பிட்டு தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

ஆர்யா கேக் சாப்பிட்ட விஷயத்தை அவரே தான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கப் கேக்குகளை விட நீங்கள் இருவரும் ரொம்ப ஸ்வீட் என்று ஆர்யாவின் மாமியார் ட்வீட் செய்தார். அதை பார்த்த ஆர்யாவோ, அனைத்தையும் சாப்பிட்டேன். மனைவிக்கு நன்றி. அடுத்த கேக்கிற்காக காத்திருக்கிறேன் என்று கமெண்ட் போட்டார்.



ஆர்யா போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, ஒர்க்அவுட் பண்ணும்போது இப்படி கேக் சாப்பிடலாமா?. அப்படி என்ன வாயை கட்ட முடியாமல் இருக்கு என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கணவருக்கும், எனக்கும் இடையே பிரச்சனையா?: சுப்ரமணியபுரம் ஸ்வாதி விளக்கம்

பிற நெட்டிசன்களோ, என்ன ப்ரோ எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆசையுடன் கலந்து கொண்டவர்களை கடுப்பேற்ற ட்வீட் போட்டது போன்று இருக்கே என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்