விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இதற்கிடையில் பிகில் படத்தின் பிரச்னை ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கிறது.
பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கே.பி. செல்வா சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து புதிய வழக்கு தொடர அனுமதித்தார்.
பார்வையற்ற வாலிபருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய இமான்
இந்த நிலையில் இது குறித்து கே.பி. செல்வா ட்வீட் செய்துள்ளார். அதில், 'சிட்டி சிவில் கோர்ட்ல வந்த judgement தவறானதுன்னும் வேற புது கேஸ் போடவே முடியாதுன்னு சொன்னது எல்லாம் பொய்ன்னும் நேத்து உயர் நீதிமன்றத்துல வந்த தீர்ப்பு நிரூபிச்சிருக்கு !! இதுவே எங்களோட முதல் சிறிய வெற்றியா நாங்க கருதுகிறோம் !! மேலும் என்னோட உரிமைக்காக விரைவில் வழக்கு தொடரவுள்ளேன் !! இந்த நேரத்துல எனக்கு உறுதுணையா இருந்த அனைவருக்கும், என்னோட advocates திரு.பாலாஜி குமார், திரு.சதிஷ் குமார் மற்றும் திரு.சந்துரு அவர்களுக்கும் என்னோட நன்றிய தெரிவிச்சிக்குற !! Hopefully truth and justice prevailed!!' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய், பூ தொழிலாளர்களுக்கு எதிராக பேசியதாக பூ கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மற்றொரு பக்கம் பிகில் போஸ்டரில் விஜய் கறி வெட்டும் கட்டையில் செருப்புக்காலை வைத்ததுக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் குரல் கொடுத்தனர்.
ஒரு போன் போட்ட விக்ரம்: த்ருவுக்காக தீயா வேலை பார்த்த சிவகார்த்திகேயன்
உடனே விஜய் ரசிகர்கள், கறிக்கடை உரிமையாளர்களுக்கு இறைச்சி வெட்டும் கட்டைகளை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கே.பி. செல்வா சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து புதிய வழக்கு தொடர அனுமதித்தார்.
பார்வையற்ற வாலிபருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய இமான்
இந்த நிலையில் இது குறித்து கே.பி. செல்வா ட்வீட் செய்துள்ளார். அதில், 'சிட்டி சிவில் கோர்ட்ல வந்த judgement தவறானதுன்னும் வேற புது கேஸ் போடவே முடியாதுன்னு சொன்னது எல்லாம் பொய்ன்னும் நேத்து உயர் நீதிமன்றத்துல வந்த தீர்ப்பு நிரூபிச்சிருக்கு !! இதுவே எங்களோட முதல் சிறிய வெற்றியா நாங்க கருதுகிறோம் !! மேலும் என்னோட உரிமைக்காக விரைவில் வழக்கு தொடரவுள்ளேன் !! இந்த நேரத்துல எனக்கு உறுதுணையா இருந்த அனைவருக்கும், என்னோட advocates திரு.பாலாஜி குமார், திரு.சதிஷ் குமார் மற்றும் திரு.சந்துரு அவர்களுக்கும் என்னோட நன்றிய தெரிவிச்சிக்குற !! Hopefully truth and justice prevailed!!' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய், பூ தொழிலாளர்களுக்கு எதிராக பேசியதாக பூ கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மற்றொரு பக்கம் பிகில் போஸ்டரில் விஜய் கறி வெட்டும் கட்டையில் செருப்புக்காலை வைத்ததுக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் குரல் கொடுத்தனர்.
ஒரு போன் போட்ட விக்ரம்: த்ருவுக்காக தீயா வேலை பார்த்த சிவகார்த்திகேயன்
உடனே விஜய் ரசிகர்கள், கறிக்கடை உரிமையாளர்களுக்கு இறைச்சி வெட்டும் கட்டைகளை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.