ஆப்நகரம்

அதர்வா நடித்துள்ள நூறு திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையி, அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 30 Apr 2019, 5:24 pm

ஹைலைட்ஸ்:

  • வரும் 9ம் தேதி திரைக்கு வரவிருந்த ‘நூறு’ படத்தை வெளியிட இடைக்கால தடை.
  • பங்குதாரர் பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை
அதர்வா, ஹன்சிகா நடித்துள்ள ‘நூறு’ படத்தை வெளியிட இடைக்கால தடை
அதர்வா, ஹன்சிகா நடித்து சான் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நூறு’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ’நூறு’ திரைப்படம் மே 3ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அதனுடைய ரிலீஸ் தேதி மே 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் 70 எம்.எம்.என்டெர்டெய்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரர் பாலாஜி ’நூறு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், பலூன் திரைப்படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தப்படி எம்.ஜி. ஆரா சினிமாஸ் நிறுவனம் தனக்கு பணம் தரவில்லை என குறிப்பிட்டிருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ’நூறு’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக பேசிய ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் மகேஷ், ‘நூறு’ படத்திற்கு எதிரான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

விரைவில், இந்த விவகாரம் தொடர்பாக ‘நூறு’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்புக்கு இடையே சுமூகம் ஏற்பட்டு, ‘நூறு’ திரைப்படம் திட்டமிட்டப்படி மே 9ம் தேதி வெளிவரலாம் என சினிமா வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்