ஆப்நகரம்

விஜய் பற்றி அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா உருக்கமான ட்விட்

தெறி படத்தினை இயக்க வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு உருக்கமாக நன்றி கூறியுள்ளார் அட்லீ.

Samayam Tamil 14 Apr 2020, 3:45 pm
தெறி படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆனதை விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil Atlee and Priya


விஜய்-அட்லீ கூட்டணியில் உருவான முதல் படம் இது. அட்லீயின் முதல் படமான ராஜா ராணி வெளிவந்து வெற்றி பெற்றாலும் அட்லீ அதற்கு பிறகு இரண்டு வருட இடைவெளி எடுத்துக்கொண்டு பிறகு தான் தெறி படத்தினை இயக்கினார்.

அது வெற்றி பெற்ற நிலையில் தான் அட்லீயுடன் விஜய் மேலும் இரண்டு படங்கள் தொடர்ந்து பயணித்தார். தெறிக்கு பிறகு அதே கூட்டணியில் மெர்சல், பிகில் ஆகிய படங்களும் ஹிட் ஆனது.

தெறி வந்து நான்கு வருடங்கள் ஆவதை ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் அது பற்றி இயக்குனர் அட்லீ ட்விட்டரில் பேசியுள்ளார்.

"தெறி என்னுடைய பேவரைட் படம். இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எல்லா பெருமையும் விஜய் அண்ணாவை சேரும். நீங்க இல்லாமல் எதுவுமே சாதிக்கு ஆகியிருக்காது னா.. லவ் யூ. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. நன்றி தாணு சார் " என அட்லீ கூறியுள்ளார்.


மேலும் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீயும் ட்விட்டரில் உருக்கமாக பேசியுள்ளார். "விஜய் - எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தற்போது வரை எப்போதும் ஆதரவாக இருந்த பெரிய அண்ணன். எப்போதும் அவர் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன். அண்ணா.. உங்கள் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி" என ப்ரியா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்