அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இதையடுத்து விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் ஹிட் படத்தை கொடுத்தார். தற்போது மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையே அவர் சொந்தமாக “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதவின் பேரன் ஐக் இயக்குகிறார். தனது தயாரிப்பு நிறுவனம் பற்றி செய்தியாளர்களிடம் அட்லி பேசியதாவது... ‘‘உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் ஏ ஃபார் ஆப்பிள்.
முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக்-கை ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதையை கேட்டு அறிமுகப்படுத்துகிறேன். ஐக், எம்.ஆர்.ராதாவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், அவர் பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன். 10 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் திரைக்கதையாசிரியராக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்’’ என்றார்.
இதற்கிடையே அவர் சொந்தமாக “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதவின் பேரன் ஐக் இயக்குகிறார். தனது தயாரிப்பு நிறுவனம் பற்றி செய்தியாளர்களிடம் அட்லி பேசியதாவது... ‘‘உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் ஏ ஃபார் ஆப்பிள்.
முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக்-கை ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதையை கேட்டு அறிமுகப்படுத்துகிறேன். ஐக், எம்.ஆர்.ராதாவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், அவர் பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன். 10 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் திரைக்கதையாசிரியராக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்’’ என்றார்.