பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் ராஜ மௌலியின் பாகுபலி -2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மும்பையில் நடைபெறவுள்ள திரைப்பட திருவிழாவில் வெளியிட உள்ளனர்.
18வது மும்பை ஃபிலிம் ஃபெஸ்டிவல் அக்டோபர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 54 நாடுகளை சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்படவிழாவின் நடுவே இரண்டு நாட்கள் இந்திய திரைப்படங்களை போற்றும் விதமாக மாமி மூவி மேளா என்ற பெயரில் நடைபெறுகிறது. பாந்ராவில் உள்ள ரங்மந்திரில் அக்டோபர் 22 மற்றும் 23ம் தேதிகளில் மாமி மூவி மேளா நடைபெறுகிறது. இதில் இந்த வருட விசேஷம் என்னவென்றால் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட உள்ளது.
அக்டோபர் 22ம் தேதி நடைபெறும் மாமி மூவி மேளாவில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த படத்தின் இயக்குநர் ராஜமௌலி, மும்பை ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.
18வது மும்பை ஃபிலிம் ஃபெஸ்டிவல் அக்டோபர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 54 நாடுகளை சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்படவிழாவின் நடுவே இரண்டு நாட்கள் இந்திய திரைப்படங்களை போற்றும் விதமாக மாமி மூவி மேளா என்ற பெயரில் நடைபெறுகிறது. பாந்ராவில் உள்ள ரங்மந்திரில் அக்டோபர் 22 மற்றும் 23ம் தேதிகளில் மாமி மூவி மேளா நடைபெறுகிறது. இதில் இந்த வருட விசேஷம் என்னவென்றால் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட உள்ளது.
அக்டோபர் 22ம் தேதி நடைபெறும் மாமி மூவி மேளாவில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த படத்தின் இயக்குநர் ராஜமௌலி, மும்பை ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.